Monday, July 27, 2015

மீண்டும் முதல் படியிலிருந்து

சில தகாத நண்பர்கள் பிளாஸ்டிக் வேலிகளைத் திருடிச் சென்றதால் சில மரக்கன்றுகளை கால்நடைகள் சிதைத்து விட்டன.

மரக்கன்றுகளைக் கூட திருடுபவர்களை என்ன செய்வது?

இது போன்ற செயல்களால் மனம் வெறுப்புற்று இப்பணிகளைப் பாதியில் விட்டு விட்டேன்.

இதோ மழைக்காலம் வந்துவிட்டது ... மனம் இருப்புக் கொள்ள வில்லை.

ஆதலால் நமது பயணம் மீண்டும் முதல் படியிலிருந்து ...

புதியதாய் வாங்கிய செம்மயிற்கொன்றை மரக்கன்றுகள், யாரோ வைத்து பட்டுப் போன மரக்கன்றுகளுக்கான இடத்திலிருந்து புதிய பயணம்.