Tuesday, August 30, 2016

ஆலம் பழங்கள்

பள்ளிக்கரணைத் தாமரைக்குளத்தைச் சுற்றியுள்ள ஆலமரங்களிலிருந்து பழங்கள் பழுத்து உதிர்ந்துள்ளன. நம்மால் இயன்ற அளவு சேகரித்து நட்டுள்ளோம்.





Friday, August 26, 2016

பனம்பழங்கள்

வடக்குப்பட்டு ஏரிக்கரை மற்றும் ஏரி வாய்க்காலில் உள்ள பனை மரங்களில் பனம்பழங்கள் பழுத்து கீழே விழுந்துள்ளன. அவற்றை தினமும் நம்மால் முடிந்த அளவு சேகரித்து ஏரிக்கரையில் நட்டு வருகின்றோம்.












07-Aug-16
5
22-Aug-16
7
24-Aug-16
8
25-Aug-16
6

இதுவரை தோராயமாக 25 பனம்பழங்களை  (பழத்திற்கு 2-3 விதைகள்/கொட்டைகள் வீதம் இருக்கும்.) நட்டுள்ளோம். மழைக்காலம் தொடங்கவுள்ளதால் இனிவரும் காலங்களில் இன்னும் அதிகமாக சேகரித்து நடவுள்ளோம்.

Monday, August 15, 2016

உயரும் மரக்கன்றுகள் காற்றில் முறியாமலிருக்க

களைச் செடிகளை அகற்றி, உயரும் மரக்கன்றுகள் காற்றில் முறியாமலிருக்க மூங்கில் குச்சியை நட்டு .... மரக்கன்றிற்கு வழு சேர்த்தாயிற்று.



சரியும் மண்ணை சீர் செய்து, களைச் செடிகளை அகற்றி, உயரும் மரக்கன்றுகள் காற்றில் முறியாமலிருக்க மூங்கில் குட்சியை நட்டு .... மரக்கன்றிற்கு வழு சேர்த்தாயிற்று.




Sunday, August 7, 2016

பனைமரம்

வழக்கம் போல் குவியும் பாலீத்தின் குப்பைகளை சேகரித்து அகற்றினோம், எருக்கு மற்றும் களைச்செடிகளை வெட்டி அகற்றினோம்.


மரத்திலிருந்து விழுந்த பனங்காய்களை நட்டு வைத்தோம்.



பனம்பழம் / பனங்கொட்டையிலிருந்தே பனை வளரும் எனத் தெரியவருகையில் ... ஐயா "நம்மாழ்வார்" கூற்றை நாம் கருத்தில் கொண்டோம்.

"விதைத்துக் கொண்டே இருங்கள்...
முளைத்தால் மரம் ... இல்லையென்றால் உரம்"

பனை பற்றிய ஓர் குறிப்பு

கிராமம் என்றால் நீர்நிலை இருக்கும். அதை சுற்றி ஆல், அரசு, வேம்பு மரம் இருக்கும். கண்மாய் அமைத்து மழைநீரையும் சேமித்தனர். கண்மாய்கரையில் உயரமாக வளரும் தன்மை உடைய பனைமரங்களை நட்டனர். இது கரைக்கு உறுதிதன்மை கொடுத்தது.
மழை காலத்தில் கரையை உடைத்து தண்ணீர் வீணாவதும் தடுக்கப்பட்டது. இயற்கை ஆர்வலர்கள் கூறுகையில், "பனைமரத்திற்கு குளிர்மேகங்களை ஈர்க்கும் தன்மை உண்டு. கண்மாயை சுற்றி பல மரங்கள் இருப்பதால் கடந்து செல்லும் குளிர்மேகங்களை ஈர்த்து அங்கு மழை பெய்ய செய்யும்,' என்கின்றனர். கண்மாய் நிரம்பும்போது நிலத்தடி நீர்மட்டம் குறையாமல் தடுக்கப்பட்டது.

இந்த முறைகள் பல ஆண்டுகளுக்கு முன் மாறிய நிலையில் ரோடு அமைக்க, கண்மாயை பலப்படுத்த அரசு அமைப்புகளே மரங்களை வெட்ட துவங்கின. தற்போது மழை பெய்யும் அளவு குறைந்ததால் மரங்களின் முக்கியத்துவத்தை அரசு, மக்கள் புரிந்துகொண்டனர். வீட்டுக்கு ஒரு மரம் வளர்ப்போம் என திட்டமிடப்பட்டு, அதன்படி மக்களும் ஆங்காங்கே மரக்கன்றுகளை நட துவங்கி உள்ளனர்.

பொதுவாகத் தாவரங்களில் ஆண், பெண் என்ற பேதம் இல்லை. ஆனால் பனை, பப்பாசி என்பனவற்றில் ஆண் பனை, பெண் பனை, ஆண் பப்பாசி, பெண் பப்பாசி என்று தனித்தனி மரம் உண்டாகி வளர்கின்றன. ஆண் பனையும், ஆண் பப்பாசியும் முதிர்ச்சியடைந்ததும் பூத்துக் குலுங்குவதுடனே தமது வாழ்நாளைக் கடத்தி வருகின்றன என்றும் கூறலாம். காய், பழம், விதை என்பவற்றை இவற்றிலிருந்து பெறுவது முடியாத காரியமாகும்.

Saturday, August 6, 2016

மூங்கில் துணை

உயரும் மரக்கன்றுகள் காற்றில் முறியாமலிருக்க மூங்கிலை நட்டாயிற்று.


துளிர் விடும் பனை


வழக்கம் போல் குவியும் பாலீத்தின் குப்பைகளை சேகரித்து அகற்றினோம். மரம் நட்டு பராமரிப்பதை விட ... சுற்றுப்புறத்தை குப்பைகளிடமிருந்து காப்பதே மிகக் கடினமானதாய் ... மக்களுக்கு சுற்றப்புற விழிப்புணர்வு எப்பொழுது வருமோ???