Saturday, January 28, 2017

மண் சரிவை சீர்செய்தும், குப்பைகளை அகற்றியும்!

தனியார் பள்ளி வளாகத்திற்கு எதிரே புதியதாய் உயரமாய் பள்ளி சார்பாக மரக்கன்றுகள் (மரங்கள்) நட்டுள்ளனர். நாம் நட்ட மரங்களைச் சுற்றி சரிந்த மண்ணை நாம் சீர் செய்து, எப்பொழுதுமே குவியும் குப்பைகளை அகற்றினோம்.



Sunday, January 22, 2017

வழக்கமான சிலப் பணிகள்

வழக்கம் போல குவியும் பாலித்தீன் குப்பைகளை அகற்றி, பாத்திகளை சீர்படுத்தி!





Sunday, January 15, 2017

வர்தா புயலுக்குப்பின்

நடா புயலால் பெரியதாக எந்த பாதிப்பில்லை என்றாலும், அடுத்து வந்த "வர்தா" புயல் சென்னையைப் புரட்டிப்போட்டது. மேடவாக்கம் வடக்குப்பட்டு எரிக்கரையிலுள்ள அநேக மரங்களை வேரோடு சாய்த்தது. அதோடு நாம் நட்ட சில மரக்கன்றுகளும் புயலால் சேதமடைந்தது.

மீண்டும் நமது பணிகள் முதலிலிருந்து ...




மரத்தை சுற்றி பாத்தியை சரிச் செய்து, களைச் செடிகளை அகற்றி ... அத்துடன் மக்காத குப்பைகளைச் சேகரித்து அகற்றினோம்.




"வர்தா" புயல் பாதிப்புகளில் சில